Wednesday, February 8, 2023
27 °c
Chennai
24 ° Thu
25 ° Fri
25 ° Sat
26 ° Sun
நம் தேசம்
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks
No Result
View All Result
நம் தேசம்
No Result
View All Result

புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு..!

by NR
June 8, 2022
in உலகம்
Reading Time: 1 min read
0 0
A A
0
புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு..!
0
SHARES
12
VIEWS
புற்றுநோய் தொடர்பான வரலாற்றில் முதல்முறையாக இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள ஸ்லோவன் கெட்டரிங் புற்றுநோய் மருத்துவமனையின் லூயிஸ் டயாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் ( dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை வைத்து சோதனை செய்யப்பட்ட எல்லோரும் 100 சதவிகிதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணம் அடைந்து உள்ளனர்.

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா.!

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா.!

June 25, 2022
14
சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!

சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!

June 17, 2022
43

சோதனையில் மிகசிறிய அளிவிலானவர்களே பங்கேற்று உள்ளனர். இவர்களுக்கு கீமோதெரபி மருத்துவ சிகிச்சைகளை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை குணமடைய செய்துள்ளனர். மொத்தம் 18 குடல் புற்றுநோயாளிகளுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்தபின் அவர்கள் முற்றிலும் அந்த நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனையிலும் கேன்சர் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளை பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்து, அதன்பின் இந்த டோஸ்டர்லிமாப் என்று மருந்து கொடுக்கப்பட்டு அவர்கள் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக அவர்களின் உடலில் எந்த விதமான ஆப்ரேஷனும் செய்யப்படவில்லை. உடலில் எங்கும் கத்தி வைக்கப்படவில்லை. பொதுவாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெரும் நபர்களுக்கு, சிகிச்சைக்கு பின் பக்க விளைவுகள் இருக்கும்.

அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் கேன்சர் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்று டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு கட்டுரையை எழுதி உள்ள டாக்டர் ஆண்ட்ரியா செரிக், இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கேன்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களு ஒரு முறை செலுத்தப்படும். மொத்தம் 6 மாதங்கள் மருந்து செலுத்தப்படும். உடலில் இருக்கும் கேன்சர் செல்களை அடையாளப்படுத்த இது உதவும். கேன்சர் செல்கள் பொதுவாக உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து எஸ்கேப் ஆக மாஸ்க் போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் கேன்சர் செல்களை கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த மாஸ்க்கை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக கேன்சர் செல்களை அழிக்க வழி செய்கிறது.

இதனால் இயற்கையாக கேன்சர் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களை கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இந்திய மதிப்பில் இதன் சிகிச்சைக்கு இப்போதே 9 லட்சம் வரை ஆகலாம் என்கிறார்கள்.

மார்கெட்டிற்கு வரும் போது இதை விட கூடுதலாக இருக்கும். அதே சமயம் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் பொதுவாக இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து மார்கெட்டிற்கு வரும். அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எத்தனை காலத்தில் நோயாளிகளை குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதை பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: CancerMedicineபுற்றுநோய்புற்றுநோய் மருந்து
Previous Post

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் 14-வது முறையாக நடால் சாம்பியன்!

Next Post

முதல் முறையாக வெளியான விராட் கோலி மகளின் புகைப்படம்..

Related Posts

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
உலகம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

January 30, 2023
13
மீண்டும் Jack Sparrowவாக ஜானி டெப்
உலகம்

மீண்டும் Jack Sparrowவாக ஜானி டெப்

June 27, 2022
11
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா.!
உலகம்

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் – ஐ.நா.!

June 25, 2022
14
சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!
உலகம்

சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!

June 17, 2022
43
தேடப்பட்டு வந்த சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு !
உலகம்

தேடப்பட்டு வந்த சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு !

June 15, 2022
8
பேட்டரி மாற்ற 17 லட்சம் கேட்ட டெஸ்லா! காரை வெடிவைத்து தகர்த்த நபர்
உலகம்

பேட்டரி மாற்ற 17 லட்சம் கேட்ட டெஸ்லா! காரை வெடிவைத்து தகர்த்த நபர்

June 15, 2022
8
Next Post
முதல் முறையாக வெளியான விராட் கோலி மகளின் புகைப்படம்..

முதல் முறையாக வெளியான விராட் கோலி மகளின் புகைப்படம்..

பேட்டரி மாற்ற 17 லட்சம் கேட்ட டெஸ்லா! காரை வெடிவைத்து தகர்த்த நபர்

பேட்டரி மாற்ற 17 லட்சம் கேட்ட டெஸ்லா! காரை வெடிவைத்து தகர்த்த நபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather

Madurai, IN
Wednesday, February 8, 2023
scattered clouds
27 ° c
40%
12.62mh
31%
33 c 21 c
Thu
33 c 21 c
Fri
33 c 19 c
Sat
34 c 20 c
Sun

Recent News

ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:

ChatGPT vs Google சுந்தர்பிச்சை முக்கிய அறிவிப்பு:

February 5, 2023

Owership and Funding

July 29, 2022

Fact-checking Policy

July 29, 2022

Cricket

Popular Post

  • ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    ஏடிஎம்மில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • டெபிட்,கிரெடிட் கார்டில் ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேப்டன் ஆன ஹர்திக் பாண்ட்யா…அறிமுகமாகும் அதிரடி வீரர்..

    0 shares
    Share 0 Tweet 0
  • சமோசா விற்கும் பத்திரிகையாளர் மூசா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 105 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

    0 shares
    Share 0 Tweet 0
நம் தேசம்

  • About us
  • Contact us
  • Privacy Policy

Follow us

© 2022 Namthesam - All Rights Reserved Namthesam.

No Result
View All Result
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • விளையாட்டு
  • உலகம்
  • லைஃப்ஸ்டைல்
  • தொழில்நுட்பம்
    • New Mobiles
    • Software Update
    • Tips and Tricks

© 2021 Namthesam - All Rights Reserved Namthesam.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.