டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று நடைபெற்றது. இதில் சரத் கமல் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பொலானியாவை எதிர்கொண்டார். இதில் 1-11,11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று மூன்றாவது சுற்றுக்கு தகுதித் பெற்றார்.

39 வயதான சரத் கமல் மூன்றாவது செட்டில் உலக சாம்பியனான சீனாவைச் சேர்ந்த மா லாங்கை எதிர்கொள்ளவுள்ளார்.