தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று (மே 3) காலமானார்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த மனோபாலா 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 3 படங்களையும் தயாரித்து வருகிறார். டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பின்னர் ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார். சிவாஜி, ரஜினி முதல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மனோபாலாவின் மரணம் திரை ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மனோபாலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த மனோபாலாவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நாளை (மே 4) காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.

மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், மோகன், தாமு, சந்தானபாரதி, ஸ்டண்ட் சில்வா, சித்தார்த், மோகன்ராம், வித்யுலேகா, நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம், சிவக்குமார், சுசீந்திரன், ஏ.எல்.விஜய், திரு, சினேகன், கார்த்திக் ராஜா, டெல்லி கணேஷ், ஷங்கர் கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார். மறைந்த மனோபாலாவின் உடல். , ஏ.ஆர்.முருகதாஸ், முரளி ராமசாமி, தினா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, ரமேஷ் கண்ணா, எச்.வினோத், ராதாரவி, ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.